Friday, December 08, 2006

தலவிருட்சம் வாழை




தலவிருட்சம் வாழை
தேன் அமுதவல்லி அம்மை மண்டபம்
இராஜகோபுரம்

Thursday, December 07, 2006

யாழ்முறி நாதர்



யாழ்முறி நாதரின் தருமபுரம் தலம்

Yazhmuri Nathar Thirukoil

யாழ்முறி நாதர்
குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்பது வள்ளுவர் வாக்கு எனினும் யாழை நாம் கண்டதுன்டா?
இல்லை யாழிசையைதான் கேட்டதுன்டாட?
யாழிசை வழக்கொழிந்தது எப்போது?

யாழிசையில் வல்லவரான திருநீலகண்டர் நாயனார் யாழ்யிசைப்பதன் _லம் இறைப்பனியில் ஈடுபட்டுவந்ததால் யாழ்பானர் என்று அழைக்கப்பட்டார். அவரோடு சமகாலத்தவரான திருஞானசம்பந்தரோடு திருமருகல், கோயில் சீயாத்தாமங்கை போன்ற பலதலங்களில் இனைந்து பாடிவந்தார். பின்னர் தமது சொந்தஊரான தருமபுரத்தில் அவ்வூர் மக்களின் விருப்பத்தினங்க சம்பந்தர் பாட்டிற்கு யாழிசையில் போட்டி போட விழைந்து மாதர் மடபிடியும் என்ற பாடலில் யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே என்ற அடிக்கு யாழிசையில் தடுமாற அடியவர் கூட்டத்திலிருந்து வருவது போல் வந்த அன்னலும் அந்த பாட்டிற்கு யாழிசை அமைத்து பாட தமது தொண்டனுக்கு இயலாத அந்த யாழை முறித்து வழக்கொழிந்தார் ஆகவே அத்தலத்து இறைவன் யாழ்_றி நாதர் என்று அழைக்கப்பட்டார்.

யாழ்முறி நாதரின் தருமபுரம் தலம் அமைந்துள்ள இடம் காரைக்காலை அடுத்து திருநள்ளார் அருகில் உள்ளது.
இக்கோயிலின் தலவிருட்சம் வாழை – அம்மை தேன் அமுதவல்லி
தருமையாதின மடத்தின் கட்டுபாட்டில் இருக்கும் இத்தலத்தில் தற்போது திருப்பனிக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
திருநாள்ளார் செல்பவர்கள் தருமபுரம் சென்று யாழ்முறி நாதரின் அருளை பெறுமாறு அன்புடன் விழைகிறேhம்.

சம்பந்தரின் யாழ்முறி நாதர் பதிகம்


மாதர் மடப்படியும் பட அன்னமும் அன்னதோர்
நடை யுடையும் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதஇனப்படைநின்றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் கடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுடவ ராழ்கடல வெண்திரை
யிரைந் நுரை கரை பொருதுவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங்குமலர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே